பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம் விளங்கும். திருளுெமர் அகலத்து=வெற்றித்திருமகள் விரும்பி விற்றிருக்கும் அகன்ற மார்பும். நோன்புரித் தடக்கை =வன்மை பொருந்திய பெரிய கைகளும் உடையையாய். சா ன் ேரு ர் மெய்ம்மறை=வீரர்களுக்குக் கவசம்போல் இருந்து காப்பவனே. வான் உறைமகளிர்=தேவமகளிர். இகல்கொள்ளும்=தம் முன்னே மாறுபட்டுப் போரிடுவதற்குக்காரணமான, நலன்=இயற்கை அ ழ கு ம். வயங்கு இழைகரந்த=விளங்கும் தலையணிகளால் மறைப்புண்ட. வண்டுபடு கதுப்பு=வ ண் டு க ள் வந்து மொய்க்கும் மணம் மிக்ககூந்தலும். ஈர்ஒதி ஒடுங்கு கொடுங்குழைகணவ = நெய் ஈரம் புலராத கூந்தல் ஒடுங்கியதால், புலப்படும் வளைந்த காதணிகளும் உடைய அரசமாதேவியின் அன்புக் கணவனே. பல்களிற்றுத்தொழுதியொடு=பற்பல யானைக் கூட்டங்களோடு. வெல்கொடி நுடங்கும்=வெற்றிக்கொடி பறக்கும். படை ஏர் உழவ=படைகளை ஏராகக் கொண்டு பகைநாட்டை உழுது பயன்கொள்ளும் உழவனே. பாடினி வேந்தே =பாண்மகளிர்க்குப்பரிசளிக்கும் பேரரசனே. இலங்கு மணியிடைந்த பொலங்கலம் = ஒளிவீசும் ந வ ம ணி க ள் இழைத்துப்பண்ணிய அணிகள்பூண்டு. திகிரி=அரச ஆணை செலுத்தி. கடல் அகவரைப்பின்=கடல்சூழ்ந்த இவ்வுலகில். இப்பொழில் முழுதாண்ட=இத்தமிழகம் முழுவதும் ஆண்ட. நின்முன்தினை முதல்வர்போல=உன்குலத்து முன்னேர்களைப்போல நின்று=நிலைபெற நின்று. இவ்வுலகமோடு=இவ் வுலகில். கெடாஅ நல்இசை நிலைஇ=அழியா நற்புகழை நிலை பெறப்பண்ணி, உடனே=அதனுடன். நீ தவாஅலியர்= நீயும் அழிவின்றி வாழ்வாயாக.

உடல்வலியாலும், படைவலியாலும் சிறந்துவிட்ட வேந்தன் ஒருவன், அ. த ைல் செருக்குமிகுந்து தன் பேராண்மையை நிலைநாட்டும் ஒரே குறிக்கோளொடு,

57