பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணையாக, வழிப்பறித்து வாழும். புல் ஆள்=ஆறலைகள்வர். வழங்கும்= வாழும். புல் இலை வைப்பின்= பனைஒலை வேய்ந்த குடிசைகளாக மாறிய ஊர்களையும் 32 - GM}}.-.lLİ GA! TÉRT • புலம் சிதை அரம்பின்=பகைப்புலத்தை அழித்து நீ அளிக்கும் துன்பத்தின் கொடுமையை. அறியாமையால், மறந்து துப்பு எதிர்ந்த =மறந்து உன்பகையை ஏறட்டுக்கொண்ட நின் பகைவர் நாடும்=உன் பகைவர் நாட்டையும். க ண் டு வந்திசின்=பார்த்துக்கொண்டு வந்தேன்; மென்சொல் கலப்பெயர் - இன்சொல் வழங்குவோரும், யாழ் முதலாம் இசைக் கருவிகளைக் கொண்ட பையினை உடையவருமாகிய பாணரும் பொருநரும். உண்டுஉரை மாறிய மழலை நாவின்=கறியும் சோறும் உண்டு உண்டு உரை குழறுமளவு தழம்பேறிய நாக்கில்ை. நீ வாழியர் இ வ் வு ல க த் தே ர் க் கு என இவ்வுலகத்தார் பொருட்டு நீ வாழ்வாயாக என்று கூறி, திருந்து தொடை வாழ்த்த = இசைக்குற்றம் இல்லாத யாழ் இசைத்து வாழ்த்த. வெய்துறவு அறியாது - துன்பம் அ றி ய | ம ல். நந்திய வாழ்க்கை - வளம் மிக்க வாழ்க்கையினே உடையாராய், செய்த = தலைவனும் நீ செய்வனவற்றையே மேவல் அமர்ந்த சுற்றமொடு = செய்து அமர்ந்தஉரிமைச் சுற்றத்தாரோடு. ஒன்று மொழிந்து= உண்மையே வழங்கி. அடங்கிய=பணிவுடைமை மேற். கொண்ட. கொள்கை = ஒழுக்கத்தையும். என்றும் = எக்காலத்தும். பதி பிழைப்பு அறியாது - வாழ்பதி விட்டுப்போகும், குற்றத்தைச் செய்து அறியாது. துய்த்தல் எய்தி = நுகர்பொருள் அனைத்தையும் நுகர்ந்து. நிரையம் ஒரிஇய வேட்கை =நரகத்துன்பம் தரவல்ல பழிபாவங்களைக் கைவிடும் வேட்கையினை உடைய ராய. புரையோர்=பெரியோர்களும், மேயினர் உறையும் = விரும்பி உடன்வாழும். பலர் புகழ் பண்பின் நீ பலராலும் புகழத்தக்க பண்புடையோனாகிய நீ, புறந்தருதலின் = ஆட்சி புரிவதால். நோய் இகந்து ஒரீஇய

69