பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றியிருப்பது, தமக்கு அறமாம்என்ற உள்ளுணர்வுடைமை" யால், ஒராண்டு காலம் காத்திருந்தார்கள். ஆனல் அக்காலம் கடந்துவிட்ட பின்னரும், அடங்கியிருப்பதுஅவரால் இயலாது. அந்நிலையில் கணவனை நினையாது,கணவன்தரும் இன்பத்தைக் க ரு தா து அடங்கிக்கிடப்பது காரிகையால் இயலுமோ? அக்கவலைவந்துற்ற பின்னர், பள்ளியில் தனித்தே கிடந்து உறங்கவும் ஒண்னுமோ? இதை உணர்த்தவே போர்வீரர் அல்லது பிறர் புகலாகாப் போர்க்களம் என்றும் பாராது ஓடோடி வந்தேன். வேந்தே, விரைக நின் மனநோக்கி’’ என்று கூறி முடித்தார். கணவன் மார்பினைப் பிறிகொரு பெண் பாயலாகக் கொண்டு விட்டாள் என்பதை அறிந்த வழி, அம்மார்பை வெறுத்துப் பு ல ந் து போவதே குலமகளிர் இயல்பாகவும், சேரலாதன்பெருந்தேவி, அவன் மார்பைப் பிறிவுஅறியாப் பாயலாகத், திருமகள் கொண்டுவிட்டதை அறிந்திருந்தும், ஊடல் கொண்டு வெறுத்து ஒதுக்குவதுசெய்யாது,கணவன்மார்பில் வெற்றித்திருமகள் வீற்றிருப்பது, அவன் ஆள்வினைக்கு அரியதோர் காலம், எனக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவளாகிவிட்டமையால், அம்மார் பைக் கிடந்து உறங்க, இன்பம் ஊட்டும் இனிய பாயலாகக்கொண்டு வி ட் - ள். சேரமாதேவியின் இப்பெருந்தன்மையைத் 'துயில் இன்பாயல்' என்ற தொடர் உணர்த்தும் சிறப்பு நோக்கி அப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராகச் சூட்டிப் பெருமை செய்துள்ளார், யாரோ ஒரு புலவர் பெருமாளுர்.

16. 'கோடு உறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி

நாடு கண்டன்ன கணேதுஞ்சு விலங்கல், துஞ்சு மரக்குழாம் துவன்றிப் புனிற்றுமகள் பூனா ஐயவி தூக்கிய மதில

5 நல்எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு

ஏனம் ஆகிய துனே முரி மருப்பின்

75