பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு போதும் குறை செய்யான். வழங்கும் அவன் கைகள் வற்றுவது என்றும் இல்லை. ஆகவே இப்பொருள் தீர்ந்தால் எப்படி வாழ்வோம் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். வழங்க அவ்வள்ளல் உள்ளான், வயிருர உண்ணுங்கள், அது தீர்ந்ததும் வருவார்க்கு வாரி வாரி வழங்குங்கள்’’ என்று ஆணை பிறப்பித்து, அவர்களையும் வள்ளல்களாக மாற்றும் முகத்தான், இமயவரம்பன் கொடையின் பெருமையைக், குன்றின்மேல் இட்ட விளக்கெனக், குவலயம் அன்னத்திற்கும் எடுத்துக் காட்டிவிட்டார்.

வருவார் அனைவர்க்கும் வழங்க வேண்டியிருந்தமை. யாலும், வழங்குவதை விரைந்து வழங்க வேண்டியிருந்தமையாலும், பாடிப் பரிசு பெறுவதல்லது பணிபுரிந்து பழகி. யறியாப் பெருமை வாய்ந்த விறலியரையும், அப்பணியிற் புகுத்தி பிறர்க்கு வழங்குவதில் புலவர்க்கு இருந்த வேட்கை மிகுதியை வெளிபடுத்தியது, விறலியருள் தலைமையாயினர் எனும் பொருள் தரும் கூந்தல் விறலியர் என்ற தொடரே. யாதலின், அப்பெருமையால், இ ப் ப ட் டி ற்கு அத் தொடரையே பெயராக சூட்டிப் பெருமை செய்துள்ளார்கள்.

18. 'உண்மின் கள்ளே ! அடுமின் சோறே !

எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே! வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப இருள்வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,

5 ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை மடவரல்,

கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே ! பெற்றது உதவுமின் ! தப்பின்று பின்னும் மன்உயிர் அழிய யாண்டு பலதுளக்கி, மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட

10 தண்ணிய எழிலி தலையாது மாறி -

st