பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகடைக் காய் ஏட்டளவில் பாட்டெழுதிப் புகழ்ச்சி சொல்லி ஏற்றமெலாம் எடுத்துரைத்து வியந்து கூறிக் காட்டுகிறோம் உழவன்றன் பெருமை எல்லாம்; கண்கட்டு வித்தையினால் கால மெல்லாம் ஒட்டுகிறோம் கற்பனையில் உலவு கின்றோம் உண்மையினைத் திரையிட்டு மூடு கின்றோம்; வாட்டமுடன் அவன் வாழுங் குடிலுக் குள்ளே வளர்துயரைத் துடைப்பதற்கு மறந்து விட்டோம். உழுகின்றான் விதைக்கின்றான் நீரைப் பாய்ச்சி உழைக்கின்றான் காக்கின்றான். ஆனால் நாளும் அழுகின்றான் உணவின்றி பெற்ற மக்கள் அலைகின்றார் என்புருவில்; பேசாத் தெய்வம் தொழுகின்றோம் முப்பொழுதும்; பேசுந் தெய்வம் துணியின்றி உணவின்றிக் கந்தல் கட்டிப் பழுதுண்ட சிலைகளெனத் திரியக் கண்டோம்; பாடுகின்றோம் அவன்பெருமை என்னே விந்தை!