பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Q4 × கவியரசர் முடியரசன் =-= உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி. மாற்றுவோம் உலகை பூக்கட்டும் பொதுவுடைமைக் கொள்கை. இனியதமிழ் அரியணையில் அமரட்டும். சிங்க மகனே! தமிழினத்தின் பெருமையைத் திரும்பிப்பார்! வரிப்புலியே! வரிந்துகட்டி நில்! சினந்தெழு! எனும் வரிகள் இளந்தலை முறைக்கு எழுச்சி உரையாக அமைந்தவை. * * அஞ்சா நெஞ்சினர், நேர்மை உணர்வினர், தனித்தமிழ் இயக்க மறவர்களுக்கு வேராக இருப்பவர். வாழும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு. இந்நூல் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் தந்த பெருமைக்குரியவர். அவருக்கு எம் நன்றி. முனைவர் இளவரசு பாரி :தந்தையின் கொள்கைகளைத் தன் நெஞ்சில் ஏந்திய திருமகன். இந்நூலை வெளியிட தோன்றாத்துணையாக இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. தமிழ்க் குமுகாயம் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். தமிழ்மண் பதிப்பகத்தார்.