பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழா மட்டும் போதுமா? (பாவேந்தர் நூற்றாண்டு β«Ά4" விழாவுக்குப் பாடியது) Аф" நேற்றாண்ட மன்னவனை நினைவுறுத்தும் தோற்றத்தாய், நினக்கு நாட்டில் நூற்றாண்டு விழாவென்றார் துவலரிய மகிழ்வுற்றேன்; நுணுகிப் பார்த்தேன் காற்றாண்ட திசையெல்லாம் கவிச்சுவையைப் பரப்பலன்றிக் கருத்திற் கொள்ளார்; ஏற்றாண்டு நின்கருத்தை ஏனின்னும் செயற்படுத்தா திருக்கின் றாரோ? பார்திருத்தப் பாடுபட்டாய் பகுத்தறிவை வளர்த்துவிட்டாய் பாவின் வேந்தே சீர்திருத்தப் பாமொழிந்தாய் சீரழிந்து பாவுலகஞ் சிதைந்த தையா! யார்திருத்தப் போகின்றார் யாப்புலகை? மயங்குகிறேன் யாது செய்வேன்? ஒர் பொருத்தம் இல்லாத உரைநடையைப் பாடலென உரைக்கின்றாரே! 女