பக்கம்:புதிய கோணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புதிய கோணம்

நிற்கின்ற ஆணவமலத்தால் மட்டும் ஒரளவு கட்டுண்டு நின்ற இப்பெருமாட்டி, அங்கியங் கடவுளும் மதுராபதித் தெய்வமும் மிக நுண்மையான முறையில் அறிவு கொளுத்தியவுடன், அந்த ஆணவமலமும் நீங்கப் பெற்றுச் சுடர்விடும் பொன்னாக ஆகிவிடுகிறார்.

முன்னர்க் கூறியபடி, அகங்காரம் முற்றிலும் மறையும் பொழுது, உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணும் நற்காட்சி விரிகின்றது. அதன் பயனாகப் போலும், அரசை ஒழிப்பேன்’ என்று கூறிய அதே கண்ணகியார், கடவுட் கோலம் கொண்டு

“தென்னவன் தீது இலன், தேவர்கோன் தன்கோயில் நல்விருந்து ஆயினான் நான் அவன்தன் மகள்’

(சிலம்பு: 29, 10)

என்று பேசக் கேட்கின்றோம்.

ஆணவ மலத்தால் கட்டுண்டிருந்த காலை, மன்னவனும் கோநகரும் தவறு இழைத்ததாகவும், தாம் தவறு இழைக்கப்பெற்றதாகவும் கருதி, தவறு இழைத்த அவர்கள் இருவருக்கும், தவறு இழைக்கப் பெற்ற தாம் தண்டனை தருவது முறையே என்றும் கூறிய அதே கண்ணகியார், அந்தக் குற்றம் நீங்கியவுடன் தென்னவன்மாட்டும் மதுரை மாட்டும் இதில்லை என்பதைக் காண்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/24&oldid=659957" இலிருந்து மீள்விக்கப்பட்டது