டாக்டர் இராச'ாணிக்கனுர் 75
வென்று வாகை சூடிப் புகழ் பெற்ருர்கள். உங்கள் முன்னேரில் பின்னேர் சிலர் பிற நாடுகளே வெல்லும் ஆற்றலின்றிச் சேர பாண்டியரையாவது வென்று விளங்கினர். நீங்களோ அத்துணேயும் ஆற்றலின்றி உங்களுள்ளேயே போரிட்டு வெற்றிகாண விழைந்தீர் போலும் மிக நன்று உங்கள் செயல் உங்களுடன் எதிர் கின்று பொருபவன் பனைமாலே யணிந்திருக்க வில்லையே; பனே மாலையணிந்த சேரனுடன் போர் உடற்றி வென்றி யெய்துவீராயின் அச்செயல் பாராட் டுதற்குரிய தாகுமே; அல்லது வேப்பந் தாரையணிந்த பாண்டியனுகவும் தோற்ற வில்லேயே எதிர்த்து நின்ற இரு வீரரும் ஆத்தி மாலையை யல்லவா அணிந்திருக்கி நீர்கள். ஒரே சோழர் குடியில் தோன்றியவர்க ளல் லவா நீங்கள்?அயல் நாட்டு மன்னரை வென்றி கொண் டீரில்லை; அன்றி உள்நாட்டுச் சேர பாண்டியருடனும் போர் செய்து வெற்றி எய்த கினைந்திலீர். ஒரு நாட்டு
மன்னராகிய உங்களுள்ளேயே போரிட உறுதிகொண் டீர் போலும் உங்களில் ஒருவர் எப்படியும் தோற்பது
உறுதி; இருவரும் வென்றி யெய்துதல் எங்கும் காணுத
செயல். உங்களில் யார் தோற்பினும் சோழர் குடி
கோற்ருெழிந்தது என்றல்லவா உலகம் பழிக்கும்?
நீங்கள் பிறந்த குடிக்குப் புகழ் தேடாதொழியினும் பழியையாவது தேடாதிருத்தல் கூடாதா? இச் செயல்
தும் சோழர் குடிக்கே பெரும் பழி விளைப்பதன்முே;
தம் குடியைத் தாமே அழித்து, தம் குடிக்குத் தாமே
பழிதேடி, மகிழ நினைக்கும் உங்கள் இருவர் செயலும்
மிகமிக நன்று! நீங்கள் செய்யும் இவ்வதிசயப்போர் பிற
நாட்டு மன்னர்களுக்கு விடா கைப்பை யன்ருே
விளைவிக்கும், என்று உள்ள முருகக்கூறினர்.