பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சு. சமுத்திரம் சீனிவாசன், மானேஜர் அறைக்குப் போகப் புறப் பட்டார். அவர் மகள போக வேண்டிய ரயிலுககு இன்னும் நேரமிருக்கு. இப்போ கூட தங்கப்பாண்டிகிட்ட கேட்டுப் பார்க்கலாம். அவர் புறப்படப்போனபோது, எதிரும் புதிருமான உள்ளுர் அரசியல்வாதிகள், மானேஜ ரைப் பார்க்க வந்துவிட்டார்கள். ரயில் போவதற்குமுன்பு, அவர்கள போவார்களா என்பது சந்தேகம், இந்தச் சமயத்தில் இங்கிதம் பார்ப்பது இங்கிதமல்ல... சீனிவாசன், மானேஜர் அறைக்குள் நுழையப் போன போது, பார்ட் டைம் தையல் ஆசிரியப் பையன், தன் உடம்பெல்லாம் பார்ட் பார்ட்டாக ஆட 'அப்புறமா வந்து பாரும். இப்போ எப்டி பார்க்க முடியும்?' என்று நிஜமாகவே அதட்டிப் பேசினான். சீனிவாசன், வகுப்பிற்குள் போகாமலும், அங்கே நிற்காமலும், 'இடுக்கில் வந்து நின்றுகொண்டார். ஒரு தடவை இப்படி இடுக்கில் நின்றபோது, எட்டாவது வகுப்புப் பயல்கள், அவரையும் பார்த்துச் சிரித்தார்கள். அரசியல் வாதிகள் போவதாகத் தெரியவில்லை. தென் காசிக்கு வேட்பாளர் தேர்வுக் குழுக்கள் வருகிறதாம். சர்வ கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் தங்கப்பாண்டி தேர்தல் குழுக்களிடம் போய், இவர் இவரை சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கப் பாண்டி, தேவடியாள் சிரிப்பு ஒன்றை, உதடு முழுவதும் உலவ விட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ அரசியல் வாதிகள் போய்விட்டார்கள. சீனிவாசன் மானேஜர் அறைக்குள் நுழைந்தார். 'இப்ப... கொஞ்சம் பிஸி... என்ன விஷயம்?' என்றார் தங்கப்பாண்டி. 'இன்னைக்கு, என் மகள வண்டியேத்தணும்... கொஞ்சம் பணம் இருந்தால்...'