பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 103 நான் மட்டும் மனசு வச்கால் எப்படி? நீயும் மனசு வைககாண்டாமா? ஒனக்கு ஹெல்ப் பண்ணணு முன் னால், னக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வேண்டாமா? சரி சரி. சாயங்காலமா ரோட்டுப் பக்கமா இருக்கிற வீட்டுக்கு வா, பேச வேண்டியதைப் பேசிக்கலாம. ஏதாவது ஒரு வழி பண்ணப் பாக்கேன்.' அங்கே பேசுறத இங்கேயே பேசலாமே. நீங்க எனக்கு அப்பா, மாதிரி. சொந்த மகள மாதிரி கேக்கேன் . இன்னும் ஒரு மாதம் வேலையில் இருந்தால், வீட்டுப் பிரச்னையை குறைக்கலாம். மெழுகாகக் குழைந்த தங்கப்பாண்டி, இப்போது மின் ரக் கம்பம்மாதிரி நிமிர்ந்து கொண்டார். ரப்பர் மாதிரி இருந்த முகத்தை, இரும்புமாதிரி ஆக்கிக்கொண் டார் அப்பாவாம்... அப்பா... அடேயப்பா. ” லீவ் வேகன்ஸி முடிஞ்சுட்டுதுன்னா, நான் என் னம்மா பண்ண முடியும்? இப்போ யாரும் லீவுல போகல. யாரையும் நான் போகச் சொல்லவும் மாட்டேன். அவங்களா போனால் ஏதாவது செய்யலாம்.' தங்கப்பாண்டி பேச்சை முடிக்கும் முன்னாலயே சரஸ்வதி அங்கே நுழைந்தாள். 'எனக்கு மூணு மாசம் வீவு இருக்கு, மாரிக்காக நான் வேணுமுன்னால் ரெண்டு மாசம் லீவுல போறேன்.' தங்கப்பாண்டி, கோபப் பாண்டியானார். சரஸ்வதி யைப் பார்த்து திரும்பிய திரும்பலில் சுழல் நாற்காலி கிரீச் சிட்டது. அதன் கால்கள் பின்னால் நகர்ந்தன. மேஜை முன்னால் நகர்ந்தது. பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டார்: