பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சு. சமுத்திரம் 'டி.ஸி பாரத்தை தந்ததே அவன்தான். நேற்றுகூட, ஒரு "கீறல் பயலுக்கு ஆறு படிச்சதா கொடுத்தான். ஆனால் ரேட்ட கூட்டியிருப்பான். விலைவாசி கூடிட்டுப் பாரு. எல்லாம் தலைவி தி. என்னை மாதுரி சொத்து பத்தோ, சொந்த பந்தமோ இல்லாதவன் கதை ஆப்பசைத்த குரங்கு மாதிரித்தான். செய்தாலும் குற்றம், செய்யாட்டாலும் குற்றம்.' சண்முகம் அமைதியாகப் பதிலளித்தான். 'நான் சொன்ன பெடரேஷன் ஒமக்கு சொத்து மாதிரி; சொந்த பந்தம் மாதிரி.’’ "சரியான ஆளுப்பா நீ. பேச்சில மடக்கிப் போட்டே. இருந்தாலும்...' சரஸ்வதி, பொறுமை இழந்தாள். 'சண்முகம் ஸார், என்கிட்ட ஒரு பாரம் தாங்க. நான் ஒங்களோட சேரத் தயார். ஸாரி...பெடரேஷன் ல சேரத் தயார். நம்ம சீனிவாசன் ஸாருக்கு பையங்களுக்கு மட்டும் ஏ ரெண்டே, ஒன்கிட்ட ஒண்ணப் பிடுங்கப் போறேன்னு' சொல்லத் தெரியும். வேற வழியில்லாமல் செய்கிற தப்பு தப்பாகாதுன்னு அவரு புரியமாட்டாரு. இவ்வளவுக்கும் அவர் மகளை நேற்று புருஷன் வீட்டுக்கு அனுப்ப முடியல. கொடுங்க ஸார் பாரத்த." சண்முகம், சரஸ்வதியிடம் நீட்டிய பாரத்தை, இனிவாசன் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொண்டார். இதற்குள், காரைக் கட்டிடத்தில் இருந்து வந்த ஆசிரியை கனகம், "நான் மானேஜர் ரூமுக்கு தற்செயலாப் போனேன். ஆறு பேர், ஆறு மாதத்துக்கு முன்ன போட்ட ஜி.பி எப். லோன் அப்ளிகேஷன் எல்லாம், அவரோட ரேக்குல கிழிஞ்சி போய்க் கிடக்கு அவங்க என்னடான்னா லோன் இன்னைக்கு வரும், நாளைக்கு வருமுன்னு,