பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 23 வேல்சாமி, அவரைத் திடுக்கிட்டுப் பார்த்தான். முழங் காலளவு வேட்டியுடன், வைரப்பட்ட எலும்புக்கூடு போல் தோன்றிய அந்த சாமியாரின் எளிமையின் பொருளைப் புரிந்துகொண்டவன் போல், உடலை குனிந்து, அவரை உற்று நோக்கினான். இதற்குள் அந்தப் பெண் சாமியாரின் அன்பினால் அன்னியோன்னியப் பட்டவள்போல், சரளமாகவும், சகஜமாகவும் பேசினாள். "மகான் தரிசனம் பாப விமோசன முன்னும் பெரிய வங்க சொல்லுவாங்க சாமி. நீங்க... விபூதி கொடுத்த பிறகாவது இதுக்கு நல்ல புத்தி வருமுன்னு நினைக்கேன் சாமி.' சாமியார் அவனை ஒரக்கண்ணால் நோட்டம் விட்ட படியே, அவளிடம் கேட்டார். 'அவனைப் பார்த்தால் நல்லவன்மாதிரி தோணுது... அப்படி என்னம்மா அடாவடி பண்ணுறான்?’’ 'பின்ன என்ன சாமி... வந்த இடத்துல... நாம உண்டு... நம்ம பிழைப்பு உண்டுன்னு இருக்காமல் காண் டிராக்டருக்கிட்ட இருக்கிற வேலையாட்களை சேர்த்து யூனியன் வைக்கப்போறேன்னு சொல்லுது. நேத்துகூட இதுக்கும் ஒரு சூப்பர்வைசருக்கும் அடிதடி வராத குறை. இந்த காண்டிராக்டருங்க பொல்லாத பாவிங்க சாமி! சர்க்கார் எஞ்சினியருங்களே... இவங்ககிட்ட சலாம் போடுறாங்க. அவங்ககிட்ட இது மோத முடியுமா? ஏற்கனவே இதமாதிரி குதிச்ச இரண்டு மூனுபேரை... லாரியால அடிச்சி, போற இடம் தெரியாம போக்கிட்ட தா ஜாடைமாடையா பேசுறாங்க. இதுக்கு ஒண்ணு ஆச்சு துன்னா... என் நிலம என்னாகிறது சாமி? சரி என்ன விடுங்க. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இதப் பெத்துட்டு... கண்ணு தெரியாம இத்தோட ஆத்தா கிடக் கிறாள். அந்தம்மா நிலைமை என்னாகிறது. நீங்களாவது புத்தி சொல்லுங்க சாமி