பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 49 முதியவள், ஏதோ ஒன்று புரிந்தவள் போல முன்னால் நடக்கிறாள். சாமியாருக்கு கோவிலை விட்டுப் புறப்படும் போதும், காவியாடையைக் காணும்போதும் மனசு கனக்கிறது. உடனே அந்த கனத்தை, ஆடலரசின் தூக்கி நிற்கும் வலதுகால் தூக்கிப் பிடித்துக்கொள்கிறது! கீழே விழுந்து கிடக்கும் முயலவன, விழாமல் நிற்கும் முயலவன் களை நினைவுபடுத்துகிறான். உரிமையும், கடமையும் ஒன்றான மானுடத் தேரில் ஏறி, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்கொள்ளப் புறப்பட்டவர்போல், ராமையா அந்த முதியவள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார். 急