பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பஞ்சாயத்துக் கிணற்றின் வட்டமான சுவரைச் சுற்றி ஒரே பெண்கள் கூட்டம். முப்பதடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள், நான்கடி உயரத்திற்கு தண்ணிர் நின்றது. பஞ்சாயத்து போட்ட குழாய்கள், வழக்கம் போல் பழுதடைந்து இருந்ததால், மின்விளக்கு வீட் டில் மெழுகுவர்த்தி இருப்பதுபோல், தோண்டிப்பட்டை" வைததிருந்த பெண்கள் கூட்டம், கிணற்றை மொய்த்தது. கிட்டத்தட்ட இருபது பெண்கள், உடலின் பாதிப் பகுதியை, சுவரோடு சேர்த்துக் கவிழ்த்து, கயிற்றை கிணத்துக்குள் விட்டு நீர் மொண்டு கொண்டிருந்தார்கள். எல்லாப் பெண்களும் இப்படி ஒரே சமயத்தில் குனிந்தது, தாமரை மலர்போல் தோன்றியது. இதற்குள் சில சுறுசுறுப்பான இளம் பெண்கள், சீக்கிரமாக நீரை மொண்டு, முதுகை நிமிர்த்தி, கிணற்றுச் சுவரை ஒட்டி யிருந்த பானைகளில் நீரை ஊற்றிவிட்டு, மீண்டும் குணிவதும், அவர்கள் இப்படி குனியும்போது, சில நடுத்தரப் பெண்கள் நிமிர்வதையும் பார்த்தால், ஒரு ரம்மியான கும்மியாட்டம் அங்கே நடப்பதுபோல் தோன்றியது. சில நாவிதப் பெண்களும் சலவைத் தொழிலாளப் பெண்களும், தத்தம் வெற்றுக் குடங்களைக் காட்டிக் கொண்டு, சீக்கிரமா தண்ணி ஊத்துங்கம்மா' என்று குடங்களுக்கருகே இருந்த பெண்களைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இது பஞ்சாயத்துக் கிணறு தான் என்றாலும், இங்கே அந்தப் பெண்கள் தோண்டிப் பட்டையைப் போட்டு நீரிறைக்க முடியாது.