பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * * , , . வி.கோ. சண்முகம்-உ 38 பழங்களைப் பொறுக்கிக் குழந்தையின் கையில் கொஞ்சிய படியே கொடுக்க வந்தாள். அடுத்த விநாடி வெடுக்கெனப் பிடுங்கி சீடையை எறிந்து iசினாள் பருவதம்! ஆறேழு அறைகள்! அடிமேல் உதைகள்! தாக்கு தலாலே சரஸி நடுங்கினாள்! நாக்கு என்பதும் நட்டுவாய்க் கிளியோ? "எச்சில் நாயே என்ன திமிரடி பச்சைக் குழந்தையின் பக்கம் நீ தான் வருவதே பாவம்! பழமும் பட்சணமும் தரவும் துணிந்தால் தெய்வத்துக் கடுக்குமா? மேலும் உதைத்தாள், குன்றுக் குட்டியாய் நகரும் பருவதம்!