பக்கம்:புதிய பார்வை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி |23.

யின் வாழ்க்கையில் திட்டப்படி கடப்பது என்பது முடி யாத காரியம். அவனுடைய வாழ்க்கை ஆற்றில் விழுந்த துரும்பைப் போல இழுபடுவது. -

மனித உடம்பில் இது மோதிரம் அணிகிற இடம், இது பூ வைத்துக் கொள்ளுகிற இடம், இது காப்புப் போட்டுக் கொள்கிற இடம் என்று அணிபவற்றுக்கும், அணிவதற்கு ஏற்பவும் பகுதிகள் இருப்பது போல் கொள்கைகளைப் பூணுவதற்கு இதயம் இடமாக இருக்கிறது என்று வைக் துக் கொண்டால் அங்கேயும் எங்த அணிகளே அணிந்தாவது: அலங்காரம் செய்தாக வேண்டும். . 'கழற்ருமல் பூணுவது' என்ற பொருள் கயம் கிடைக் கும்படி கொள்கைக்குப் பூட்கை" (பூணுவது) என்று பழைய தமிழில் பெயர் வைத்திருக்கிருர்கள்.

'பூட்கை இல்லோன் யாக்கை போல-என்று புறகா ஆாற்றுப் பாடல் ஒன்றில் வருகிறது. இந்தப் பாடலில் வருகிற பூட்கை" என்ற ப த த் து க் கு மட்டும் எல்லேயற்ற பொருள் உண்டு. அந்தப் பதத்தைச் சிரியானபடி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டுமென்ருல் (settled principles) எனச் சொல்ல வேண்டும். உடம்பு இளமையாகவும், வலிமையாகவும் இருப்பது அந்த உடம்பை ஆள்கிறவன் வகுத்துக் கொண் டிருக்கிற திட்டமான கொள்கைகள்ேப் பொறுத்தது. மூகமும், கண்களும், மூக்கும், உதடுகளும், பிறப்பிலேயே அழகாக வாய்ப்பது போல் கொள்கைகள் நன்ருகவும், திட்டமாகவும் வாய்ப்பது மனத்துக்கும் உடம்புக்கும் அழகு. நாம் திட்டமாக நமக்கென்று வகுத்துக்கொண்ட ஒழுங்குகளுடன் கட்டுப்பட்டு வாழ்கிருேம் என்று கினேப் பதற்கே பெருமையாக இருக்கிறதல்லவா ? .

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும், திட்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையில் எந்த இடத்திலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/125&oldid=598198" இலிருந்து மீள்விக்கப்பட்டது