பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 எவரும் இந்த முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டி யிருக்கின்றது. அப்படிச் செய்வதில், போதிய அளவிலும், பயன்படும் முறையிலும் அமைத் துக் கொள்வதும் அவசியமாகின்றது. ஆகவே, நாம் திறமையுள்ள ஒரு படையையும், கடற்படையையும், விமானப் பட்ையையும் வைத்துக்கொள்ள வேண்டி யிருக்கின்றது. ஆனால், 1947 அக்டோபரில் ஒரு நாள் மாலையில் ஏற்பட்டது போன்ற அவசியம் தோன்றின லன்றி, நம் போர் வீரர்களைப் போருக்கு அனுப்புவதை நான் விளையாட்டாகக் கருத முடியாது. மிக்க வருத் தத்தோடு சிந்தனை செய்து, பிறரிடம் கலந்து ஆலோ சித்த பிறகே, கான் அந்த நடவடிக்கையை மேற் கொண்டேன். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 7-8-1952. o: o: o ஆபத்தான வழி பலாத்கார வழி ஆபத்தானது, பலாத்காரம் உள்ள இடத்தில் சுதந்தரம் நீடித்து நிலைத்திருப்பது அரிது. -அலகாபாத், திரிவேணி சங்கமத்தில் காந்திஜி அஸ்தி, யைக் கரைக்கும்போது கூறியது. 12-2-1948. o # Fo சாந்தியான சூழ்நிலை உலகிலுள்ள அரசாங்கக் கேந்திர ஸ்தானங்களில் இராணுவ மனப்பான்மை புகுந்திருப்பது அபாயகர மான ஒரு வளர்ச்சி யாகும். இதை காம் எப்படிச் சமாளிப்பது ? இந்தியாவில் இருக்கும் காம் அதிகப் படியாக எதுவும் செய்துவிட முடியாது என்பதை