பக்கம்:புதிய பொலிவு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


மகாநாட்டிலே கதரோட போனாதான் நம்ம பேச்சை, காது கொடுத்துக் கேட்பாங்களாம்..."

"கொடிமரத்தான் சொல்றானா?"

"ஆமாம்"

🞸

கொடிமரத்தான் வேலப்பன் தலைமையிலே கிளம்பிய "கமிட்டி'யைக் கோவைக்கு அழைத்துச் சென்றான். எல்லா மந்திரிகளையும் காட்டினான், நூறு கெஜ தூரத்தில் இவர்களை நிறுத்திவைத்து.

"என்னை 'நீராகாரம்' இருந்தாக்கொடு கவுண்டாய்யா! என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவர்தாம்பா, அதோ, மேசையை அடித்துப் பேசராரே அந்த மந்திரி. என்று கமிட்டியில் ஒருவர் சொன்னார்.

"இம்மாந் தொலைவிலே இருந்து இவங்களை 'தரிசனம்' செய்தூட்டுப் போகவா, கொள்ளைப் பணத்துக்கு வேட்டு வைச்சிருக்கான் கொடிமரத்தான்" என்று கமிட்டியிலே இருந்த ஒரு கோபக்காரர் கேட்டார்.

மந்திரி பேசிக்கொண்டிருந்தார்—பேச்சு என்று கூறுவது பொருத்தமல்ல—மிரட்டிக்கொண்டிருந்தார்.

"நம்முடைய ஜனங்களுக்கே ஒரு கெட்ட சுபாவம்; எப்போதும் ஏதாவது ஒரு குறையை எடுத்துக் கூறிக்கொண்டு, மூக்காலேயே அழுது கொண்டு கிடப்பார்கள். அது இல்லை இது இல்லை; இதைக் கொடு, அதைக் கொடு; என்று கேட்டுக் கேட்டு, ஆட்சியிலே இருப்பவர்களைத் தொல்லைப் படுத்தியபடி இருக்கிறார்கள். இது பாரதத்தின் பண்பு அல்ல....இதை நம்முடைய தலைவர்கள் பலதடவை எடுத்துச் சொல்லியும் வருகிறார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/19&oldid=1575590" இலிருந்து மீள்விக்கப்பட்டது