பக்கம்:புதிய பொலிவு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கவர்ச்சி பெற்று, இப்போது கிராமக் கட்டழகியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

வடிவேலனுடைய தாயார், தன் மகன் ஒரு நாகரீக காரிமணியை மணம் செய்துகொண்டு, பார்ப்பவர்கள் பாராட்டத்தக்க விதமாக வாழவேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அதற்கான முயற்சிகள் பலதடவை செய்தார்கள் — எல்லாம் ஏமாற்றத்திலேதான் முடிந்தது—காரணம், அந்த அம்மையார்மீது நெடுங்காலத்துக்கு முன்னாலே ஏற்றிவைக்கப்பட்ட கரைதான். எனவே, வடிவேலன், கிராமத்துக் கட்டழகியைப் பெற விரும்புகிறான் என்று தெரிந்து, முதலிலே, இதுதானா என் மகனுக்கு என்று வருத்தப்பட்ட போதிலும், ஏதோ, இதுவாவது மங்களகரமாக முடியட்டும் என்று எண்ணிக்கொண்டார்கள்; பெண் பார்த்துவரவும், ஏற்பாடுகள் செய்யவும் தானே கிளம்பினார்கள்.

இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள், 'பாவம்' இந்த இடம் பச்சென்று இருக்கிறது, பளபளப்பாகவும் இருக்கிறது, பணம் படைத்தவனாகவும் இருக்கிறான், கிழவனல்ல, அழகாகவும் இருக்கிறான், என்றாலும் பட்டணத்துப் படாடோபம் இல்லை, இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு சீமாட்டிபோல வாழ்ந்தாலாவது, செல்லி இழந்துவிட்ட சந்தோஷம் ஓரளவுக்குத் திரும்பி வரக்கூடும் என்ற எண்ணத்திலே, சடையாண்டிற திருமணத்துக்குச் சம்மதமளித்தான்.

ஊரார் பார்த்துப் பரிதாபப்பட வேண்டிய நிலைமையில் அப்பா நம்மாலே ஆக்கப்பட்டுவிட்டார், என் கதி என்ன ஆகுமோ என்ற ஏக்கமே அவரை வாட்டி வதைக்கிறது, பெரிய இடத்திலே நான் வாழ்க்கைப்படுவதைக் கண்ட பிறகாவது அவருடைய மனதுக்கு ஒரு சந்தோஷமும், பெருமையும் கிடைக்கட்டும், என் மருமகன் சாமான்யமானவனல்ல, இந்தக் கிராமத்தையே விலைக்கு வாங்கிவிடக் கூடிய அளவு பணம் இருக்கு, படித்திருக்கிறான், நல்ல மனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/44&oldid=1576381" இலிருந்து மீள்விக்கப்பட்டது