பக்கம்:புதிய பொலிவு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

துடைத்துக்கொள்கிறார்கள். எத்தனையோ தடவை, கீழே எண்ணெய் கொட்டிவிட்டால் எடுத்துத் தலையில் தடவிக் கொள்ளுவேன்—நான் இங்கே, இவருக்கு வந்து வாய்ப்பது என்றால், எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. களத்து மேட்டுக்கு ஓடுவதும், முழங்காலளவு சேற்றிலே இறங்கி நடப்பதும், மரத்தில் ஏறிக்காய் பறிப்பதும், மடுவில் நீந்திக் குளிப்பதுமாக இருந்து வந்த என்னை, இங்கே, காலிலே ஜாண் உயரத்தில் பூட்சும், கையிலே ஒரு அலங்காரப் பையும், கண்ணுக்குத் தங்கக்கம்பி போட்ட கண்ணாடியும் போட்டுக்கொண்டு, முக்கால் சிரிப்பும் கால் பேச்சும் கலந்தளித்துவரும் நாகரீகப் பெண்களின் நடுவில் கொண்டுவந்து ஏன் நிறுத்தினார் என்றே தெரியவில்லை. அவர் மேஜைமீது அடுக்கடுக்காகப் புத்தகங்கள்—ஒரு வரியும் எனக்குப் புரியாது......ஆனால் என்னிடம் அவர் காட்டும் அன்பைக் கண்டாலோ, அவருடைய காலைத் தொட்டுக் கும்பிடவேண்டும் போலத் தோன்றுகிறது. கதை ஒன்று கேட்டிருக்கிறேன் சின்ன வயசில், வேண்டுமென்றே ஒரு ராஜா, தன் நாட்டிலே இருந்த பிச்சைக்காரனுக்கு ஒருநாள் ராஜா வேலைகொடுத்து, அதை அவன் எப்படி எப்படி உபயோகப்படுத்துகிறான் என்று வேடிக்கை பார்த்தானாம் — அப்படி இருக்கிறதே இது என்று எண்ணிக் கொள்வாள். இது ஒரு வேடிக்கையோ என்னவோ என்று எண்ணிக்கொண்டு, அதற்கு ஏற்றபடியே நடந்து கொண்டு வந்தாள்.

கிராமத்துக் கட்டழகியின் கவர்ச்சி, நகரத்துச் சூழ்நிலையில் மெள்ள மெள்ளத் தானாகவே மாறிக்கொண்டு வரலாயிற்று; ஒருவரும் கவனிக்கக்கூட முடியவில்லை. பசுமைக்குப் பக்கத்திலே இந்த 'இளமை' உலாவிக் கொண்டிருந்த காட்சிக்கும், பங்களாவில், ஆள்நடமாட்டம் இல்லாமல், அந்தஸ்த்தைக் காட்டும் பொருள்களுக்கு மத்தியில் செல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/48&oldid=1576403" இலிருந்து மீள்விக்கப்பட்டது