பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கூறியுள்ள அலங்கார அம்சங்களைப் பொறுத்தது மட்டுமல்ல, ஒரு கலைஞனே உடன் நிகழ்கால வாழ்க்கை பாதித்து அவனே உணர வைத்திருப்பது. வாழ்க்கையிலும் கலையிலும் மதிப்புத் தரநிலை தேடுவது இவைகள் சம்பந்தமாகவும் உண்டு, எனவே வசன கவிதையையும் புதுக் கவிதையை யும் வித்தியாசப்படுத்திக் கொள்வதுதான் முறையானதாகும். குழப்பிக் கொண்டல் தற்காலக் கவிதை சம்பந்தமாக ஒரு அபிப்பிராயம் விழுவதற்கு இடமே ஏற்படாது போய் விடும்.

இதில் இன்னுெரு விசேஷம், வசன கவிதைக்கான சில இலக்கண அம்சங்களே கூற ஒருவர் முற்படும்போது புதுக் கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிருேம். கு. ப. ரா. வசன கவிதை பற்றி சொன்னலும் புதுக் கவிதை பற்றிய விளக்கமாகவே அது இருக்கிறது. பிச்சமூர்த்தியின் வாதத்திலும் சில புதுக் கவிதை சம்பந்தப் பட்டதாக இருக்கின்றன. புதுக் கவிதை சம்பந்தமாக புதுமைப்பித்தன் கூறியுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.

"ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ள தெல்லாம் ரூபம் உள்ளதென்று கொள்ள வேண்டும். இன்று ரூபமற்ற கவிதையென சிலர் எழுதி வருவது இன்று எவற்றையெல்லாம் ரூபம் எனப் பெரும்பாலோர் ஒப்புக் கொன்கிருக்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிருர்கள் எனக் கொள்ள வேண்டுமே யொழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிருர்கள் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை.

இப்படி அவர் கூறும்போது மரபானவை என்று நாம் கருதி உள்ள உருவ வகைகளே வைத்து புதுக் கவிதை முயற்சிகளை மதிப்பிடக் கூடாது என்று அவர் கருதுவதாகத் தான் படுகிறது. அத்துடன் கவிதைக்கு உரிய (கு. ப. ரா. குறிப்பிட்ட அலங்காரங்களுடன் கூடிய) கவிதைக்கு கரு, கருத்து இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிருt. ஆளுல் அவர் இன்று வசன கவிதைகள் என்ற