பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிணற்றில் விழுந்த நிலவு

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு மணக்கும் அவள் உடலை மணல் மீது தோய விடு நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு கலைமேவும் அவள் குழலைக் காற்றிலே கோதி விடு அலைக்கும் அவள் மார்பை அல்லிக்கொடி

அணைக்கவிடு மருண்ட முகம் தெளியத் திருமஞ்சள் பூசி விடு ஈதனைத்தும் செய்துவிட்டு இதமான கவிதைகளால் ஒத்தடங்கள் கொடுத்து விடு உடலெங்கும் தேன் பூசிப் பத்திரமாய்ப் பெண்ணிவளே வான்முனையில் கொண்டுவிடு இருட்டு முடியுமுன்னே, இரவு முடியுமுன்னே திருஷ்டி கழித்தவளேத் திருப்பி யனுப்பிவிடு

இவ்வாறு இன்னும் பல வரிகளைக் கொண்டது இக் கவிதை. இதற்கு ஒட்டும் வெட்டும் ஆக இரண்டு கவிதைகள் எழுதினர் தி. சோ. வேணுகோபாலன்.

கற்பனை விரிவும் கருத்தாழமும் உணர்வோட்டமும் கொண்ட கவிதைகள் அவை. நிலவைக் கற்பரசியாகக் கொண்டும் நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் ஒட்டும் வெட்டும் படைக்கப்பட்டுள்ளன. இவை எழுத்து 36-ம் ஏட்டில் இடம் பெற்றன.

"எழுத்து 36-வது இதழ் அருமையான கவிதைகள் பலவற்றுடன் விளங்கியது. வேணுகோபாலனின் ஒட்டும் வெட்டும் டி. கே. துரைஸ்வாமியின் பேதா பேதம், அலங்காரம், சிலேடை ஆகிய மூன்று கவிதைகள்’ இவற்றுடன் டி. சி. ராமலிங்கம் (தரும சிவராமூ) சுவிதைகள் ஐந்தும் இதில் வெளி வந்தன.

| படிமச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகப் பலரால் பல

இடங்களில் கையாளப் பெற்றுள்ள விடிவு இவ் ஐந்து கவிதைகளில் ஒன்று.

9 سنويا