பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

அதை எடுத்து விட இரண்டு வாரம் இதை விட்டால் வேறு வேலையே இல்லையா உனக்கு?

என்று நிலவைப் பார்த்துக் கேட்கிருர் அவர். (எழுத்து 68) .

அதே நிலவை சு சங்கரசுப்ரமண்யன் வேறுவிதமாகப் பார்க்கிருர், (எ.69) -

அவளோ சினிமாக்காரி உருவம் காட்டி ஊரை மயக்க ஒளி பாய்ச்சி குளோசப்பில் நிறுத்துகிருர் யாரோ. அப்படியே இருந்துவிட்டாலோ முகப்பருவும் மேக்கப்பை மீறிவிடும். எனவேதான் ஒளி குறைத்து நிழல்பூசி ஒளிக்கின்றர் காமிரா வே8லக்கு காரிகையா பொறுப்பு!

சி. மணியின் கவிதை நினைவுகள் குறிப்பிடப் பெற வேண்டிய மற்ருெரு அருமையான கவிதை. பரிகாசமும், சிந்திக்க வைக்கும் கருத்தாழமும் கொண்ட படைப்பு: 4 பகுதிகள் கொண்டது. (எ. 61)

இருக்கின்ற பாலோ இருவருக்குத் தான் அளவோ குறையாது மூவர்

அருந்த வேண்டுமென்ருல் நீரைக் கொட்டி