#58
அண்மையில் ஆறு ஆண்டுகளாக எழுத்து இதழ் களிலும், பின்னர் இலக்கிய வட்டத்திலும் இடைவிடாது படித்து வருகிறேன்.
- எழுத்து ஏட்டின் தோற்றத்திற்குப் பின்னர், தமிழில் புதுக் கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆணுல் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்; விவாதத் திற்குரிய விஷயம்.
என்னைப் பொறுத்தவரையில் இன்று எழுதப்பெறும் பழைய (மரபுக்) கவிதையைப் போலவே புதுக் கவிதையும் எனக்குச் சலிப்பூட்டுகிறது.
புதுக் கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சியை, படிமச் சிறப்பை உருவ நயத்தை நான் ரசிக்கிறேன். இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன்.
ஆயினும், புதுக் கவிஞர்களின் குரல்களை என்னுல் ரசிக்க முடியவில்லை. -
வெறுமை, விரக்தி முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக் கவிதையின் அடிநாதமாக ஒலிக்கின்றன.
நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியார்களாகவும் திருமூலர்களாகவும், திகம்பரச் சித்தர்களாகவும் சில புதுக் கவிஞர்கள் மாயாவாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்கு வது, எனக்கு மிகவும் பிடபடாத சங்கதி
இந்தக் கவிஞர்கள் தமிழ்ச் சொல்ல முறிக்கட்டும். மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும்? அது தான் தெரியவில்லை. ஐயோ பாவம். இவர்களுக்கு என்ன அகக்கேடு, நோய்? -
புதுக் கவிஞர்களின் இந்த மனமுறிவு (மணமுறிப்பு) விவகாரம் பற்றி எழுத்து ஆசிரியர் சி. சு. செல்லப்பா, 62வது ஏட்டில் வரைந்திருப்பது இங்கு நன்கு சிந்திக்கத் தக்கது.