பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

"மாடர்னிட்டியும் நம் இலக்கியமும் என்னும் 1984 பிப்ரவரி தலையங்கத்தில் சி. சு. செ. கூறுகிருர்:

"மனமுறிவு-ஃப்ரஸ்டிரேஷன்-ஒரு மோஸ்தர் (ஃபாஷன்) இல்லை, இன்னெரு இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதுக்கு. அந்த இடத்து அந்த நாளைய வாழ்வைப் பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதுக்கு உணவூட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில் தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச் செய்தால், அதில் உண்மை இருக்காது.

ந.பிச்சமூர்த்தி இது பற்றி ஒரு சம்பாஷணையில் சொல்லியது: மேற்கே டிஸ்சின்டக்ரேட்டிங்-அதாவது, உதிர்கிற நிலை. நம்முடையது. ஷேப்பிங் அதாவது, உருவாகிற நில, எனவே மனமுறிவு நம் இலக்கியத்தின் பொதுத் தொனியாக இருக்க முடியாது.”

ந. பி. வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முற்படாதவர். ஏன், இலக்கியத்தை விட வாழ்க்கை யையே மேலானதாகக் கருதுபவருங்கூட. ந. பி. சொன்னது ஆணி அடித்த கருத்து...'

ந. பிச்சமூர்த்தியின் ஆணி அடித்த கருத்தை, அதை அடியொற்றிக் குரல் எழுப்பும் செல்லப்பாவின் கருத்தை, ஏனைய புதுக் கவிஞர்கள் -மாயாவாத மனமுறிவுக் குரல் கொடுக்கும் புதுக் கவிதைத் தம்பிரான்கள் -ஏற்றுக் கொள் வார்களா, அல்லது மணமுறிவு (மணமுறிப்பு)த் தத்துவம் தான் இன்றையப் புதுக் கவிதையின் பொதுக்குரலாக விளங்குமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயம். நான் உணர்ந்த வரையில், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மயங்க வைத்தல் ஆகிய சீக்குகள் புதுக் கவிஞர் களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இந்நோய் விரைவில் அகலக் காலதேவன் அருள்புரிவாளுக!”