பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి

அவள் வளர்ந்த ஜீவக் கதை அவள் பெருக்கிய வேதப் புதல்வர் அவள் தழுவிய மதங்கள் அவள் ஆக்கிய கலைகள் இத்தனையும் பொய்யாத புகழ்க்கதை ஆகுல் - கலை, கணிதம், கலாசாரப் பணி, வேதம், சோதிடம், போதசன்மார்க்கம் கோபுரம், மந்திரம், கோர்த்து நின்ற மதங்கள், யானை, அரசு, இடையிடைப் பூசல்கள், மனம் வளர்த்த உழைப்பு, உழைப்பு மீறிப் பொன் பொருள்' . காலத்தை நீட்டிக் கருத்தை உள்ளிழுத்து

ஞானமே யாவும், அஹம் பிரும்மாஸ்மி, தம்மம் சரணம் கச்சாமி என்று மேளந்தட்டிப் பாடி புறநோக்கு விலகிப் போச்சு.

முன்னூற்றுக்கு முன் விஞ்ஞானம், லெளகீக வியாபாரம் - பொல்லாத தொழில் நுட்பம், கள்ளமுமுகம் யந்திரப் பூட்டம், தந்திரப் பேச்சு என்றேதும் தெரியாத பாமரமாய் களித்திருந்தோம் பிறவியினுல்.

திரை கடலோடி திரவியம் தேடி வந்தோரின் நிலப் பகட்டுக்கு நாட்டை கைகழுவி, நெறியை பங்கிட்டு நாமும் நிறம் மாறி துரை வாழ்வில் வழுக்கி விழுந்தோம் அடிமைப் புதையில். புதையிருளில் மோகமுற்று மகுடி முன் பாம்பாகி தாய் சொல் தாழ்வென்ற நினைப்பில் வேடிக்கை யந்திரங்கள், மில் துணிகள் குல்லாய்கள், காலுறைகள், நீளத்கைப் பழக்கங்கள் நிரம்பி வழித்து நிலத்தைக் குழப்பின,