பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82

'பச்சையம் என்ற நெடுங் கவிதை. அவருடைய சிற்றம் உணர்ச்சி வேகத்தோடு கவிதை உருவம் பெற்றிருக்கிறது.

எழுத்திலே பாலுணர்ச்சி கூடாது, அது பச்சை என்று சொல்கிறவர்கள் யார்?

வாலே இளநீரை வாய்விழியால் வாரிப் பருகும் இவர்கள் இளமை கொடுக்கும் துணிவில் இடித்துக் களிக்கும் இவர்கள் வயது வழங்கிய வாய்ப்பில் அமர்ந்து சிவிர்க்கும் இவர்கள் இருவரைக் கட்டிலேற்ற ஊதி முழக்கி ஊர்கூட்டும் இவர்கள் இருளில் ரகசியமாய் வெட்கி மருவி மயங்கும் இவர்கள் பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்

பருமை உரைக்கும் இவர்கள் எல்லாம் இவர்கள்தான்-வேறு யார் சொல்வார்கள்? கூடாதாம்: பச்சையாம்!

எழுத்திலே பச்சை என்ருல் எழுத்தாளன் மனசிலே பச்சை என்ருகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? நரகம்’ எனது நரகமா, நரகத் தலைவன் நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிருர்,

பலவகை ஆறுகள் எனக்குள் இருக்கும் கடலில் கலக்கும்; எழுபவை கடல் முகில்,

அருவிக்கு வெறுப்பில்லை வருவோரைக் குளிப்பாட்டும். காற்றுக்குத் தடுப்பில்ஆல காற்றெங்கும் புகுந்துவிடும். நீயிழுத்த காற்ற்னுக்கள் நானிழுத்த காற்றணுக்கள். கதிரொளிக்கு மறைப்பில்லை; கதிரொளியில் பச்சையிலே, படைக்கின்றேன் பச்சையத்தால்,