அசுத்தக்காரி அடுத்த வீட்டிலிருந்து யாரும் அறியாமல் கூனிக் குறுகி கடன் வாங்கி வந்த அரிசியை முற்றத்தில் இறைத்து உங்கள் மாநாடு கூட்டி மகிழ்ந்து கரம் கொட்டி பாடினுன்!
அவன்
பட்டினி கிடந்தான்; ஆலுைம் ஊரெல்லாம் அன்னதானம் நடந்தது; அந்த காலம்! 'படி அரிசிப் பேச்சால்
பதவி பறிபோகும்: இந்தக் காலம்!
அன்றவன் அடிமை: ஆனந்தப் பட்டான்; இன்று நான் சுதந்திரன்! சோகப் படுகிறேன், சீi போ!
புதிதாக எழுதத் தொடங்கியிருந்தவர்களில் செல்வி இரா. மீனுட்சியின் கவிதைகள், தனிப்பார்வை, கற்பனை வளம், இனிய சொல்லோட்டம், கருத்தாழம் முதலிய நயங்க ளோடு அமைந்திருந்தன.ஆற்று மணலில் பதியும் கால், தடங் கள் பாய், ஆலம் விழுது, கோட்டையும் கோவிலும் போன்ற விஷயங்களே புதிய கோணத்தில் கண்டு கவிதைகள் படைத் திருக்கிருர் இவர் ஆடிக்காற்றே என்ற கவிதை குறிப் பிடப்பட வேண்டிய ஒன்று. .
ஆடிக் காற்றே வா! வா! மண் தூவி விதை தூவி மூ8ள காண விழை காற்றே. என் சொல் கேளேன்.