பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

எழுவதாகும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறய்ைவு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பதே நடையின் நோக்கம். இந்த இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த நடை" இது "நடை"யின் முதல் இதழில் காணப்பட்ட அறிவிப்பின் ஒரு பகுதி ஆகும். - "எழுத்து இதழ்களில் முன்பு எழுதி வந்த நண்பர்கள் தான்-சி. மணி, ந. முத்துசாமி, எஸ். வைத்தீஸ்வரன், இரா. அருள், வி. து. சீனிவாசன் ஆகியோரே -"நடை"யின் இதழ்களில் அதிகமாக எழுதினர்கள். ஐராவதம், ஞானக் கூத்தன் புதிதாக வந்தவர்கள். மற்றும், அசோகமித்திரன், நகுலன், மா. தகூகினுமூர்த்தி, நீல. பத்மநாபன், கோ. ராஜாராம் படைப்புகள் அவ்வப்போது பிரசுரமாயின. வெ. சாமிநாதன், கலாநிதி க. கைலாகபதியின் மார்க்சீயக் கண்ணுேட்ட விமர்சன முறையை ஆராயும் நீண்ட கட்டுரையை மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினர்,

"நடை" ஓவியம், கலே சம்பந்தமாகவும் கருத்து தெரிவித்து, கட்டுரைகள் பிரசுரித்தது. புத்தக விமர்சனம், மொழி பெயர்ப்பு விஷயங்களும் உண்டு. நாடகம் படைப் பதிலும் ஆர்வம் காட்டியது, நடை எட்டே எட்டு இதழ்கள் தான் வத்தன. அது நடைபெற்ற இரண்டு வருஷ காலத்தில், இலக்கியத்தையோ எழுத்தாளர் கஆளயோ பாதிக்கும்படியான பெரும் சாதனைகளே நடை: புரிந்துவிட்டது என்று சொல்வற்கில்லை. சிறுகதையில் "நடை" கணிசமாகவோ, நினைவில் நிற்கும்படியாகவோ எதையும் தந்ததில்லை.

தமிழ் இலக்கியம் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் சில வந்துள்ளன திரைப்படப் பாடல்களின் இலக்கியத் தன்மை குறித்து, முதல் முறையாக சிந்தனையைத் திருப்பி விடத் தூண்டும் நல்ல கட்டுரை ஒன்றும் வந்தது. இதை செல்வம் தான் எழுதியிருந்தார். பழந் தமிழ் இலக்கியப்