பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

என்ருலும், இரண்டு பற்றித் தனித்தனியே எழுதியாக வேண்டியது அவசியம் என்று எனக்கும் படுகிறது. அவை தமக்கெனத் தனித் தன்மை கொண்டிருப்பதோடு, புதுக் கவிதை எழுதுபவர்களேயும் புதுக் கவிதையின் போக்கையும் வெகுவாகப் பாதித்துள்ளன என்று நான் உணர்கிறேன். ‘கசடதபற’ என்ற இலக்கியப் பத்திரிகையும், வானம்பாடி’ என்ற கவிதை வெளியீடும்தான் அவை

3 . கசடதபற

1970 அக்டோபரில் பிறந்தது ‘கசடதபற’.

'இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதல்ை கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், திறய்ைவாளர்களின் பொதுமேடைதான் கசட தபற. ஊதிப் போன சுய கெளரவங்களாலும், பிதுங்கிய பார்வைகளாலும் இவர்கள் பாதிக்கப்படாதவர்கள். அரசியல் சமயம், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங் களுக்கு வாரம் தவருமல் தோப்புக்கரணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித் தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப் பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள. உலகின் இதர பகுதிகளின் இலக்கியத்தில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச்சிகளே இனம் கண்டு கொள்வதிலும் இவர்கள் தேர்ந்தவர்கள் .

‘கசடதபற, சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம்விடும் அறை கூவல்களை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாசாரத்தின் ஆழ அகலங்களே இலக்கியத்தில் காட்ட கசடதபற வந்திருக்

"எதையும் செய்யுங்கள், ஆளுல் இலக்கியமாகச் செய் யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்”.