பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

சங்ககாலக் கவி மோசிகீரனரை வியந்து பாராட்டி இவர் எழுதிய நல்ல கவிதை இவரது தனித்த பார்வைக்கும் கவிதையில் புதுமை சேர்க்கும் விருப்புக்கும் சான்று கூறியது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இனிமையும் இயல்பான சொல் ஒட்டமும் ஒலி நயமும் அமைந்து கிடக்கின்றன. கவிதைக்காக இவர் தேர்ந்து கொள்கிற விஷயம் புதுமையும், தான் உணர்ந்ததை நவீனமான பரிகாசத் தொனியோடு எடுத்துச் சொல்வதும், கவிதை சொல்லும் முறையில் புதுமைகளைக் கையாள்வதும் இவரது படைப்புகளுக்கு விசேஷநயம் சேர்ச்கின்றன. 'கசடதபற’ ஞானக்கூத்தனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.

வெறும் ஆர்ப்பாட்டப் பிரசங்கிகள் வேஷம் போடும் போலித் தலைவர்கள் போக்கை நடை நாட்களிலேயே கிண்டல் செய்வதில் ஆர்வம் காட்டிய ஞானக்கூத்தன் ‘கசடதபற’ விலும் அதை திறமையாகச் செய் திருக்கிருர். "மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான் இதற்கு உதாரணம் ஆகும்,

நாடோடிப் பாடல்களின் பாணியில் கவிதை எழுதி வெற்றி கண்டிருக்கிருர் இவர்.

'காடெ கோழி வெச்சுக் கணக்காக் கள்ளும் வெச்சு சூடம் கொளுத்தி வெச்சு சூரன் சாமி கிட்ட வரங்கேட்டு வாரீங்கள: ஆரோ வடம் புடிச்சி அய்யன் தெரு நின்னுடுச்சி’ என்று ஆரம்பித்து வளரும் தேரோட்டம்' குறிப்பிடத் தகுந்தது.

'கண்ணிமையாக் கால் தோயாத் தேவர் நாட்டில் திரிசங்கைப் போக விட மாட்டேன் என்று ஒரு முட்டாள் சொன்னது பேராபத்தாச்சு என எடுப்பாகத் தொடங்கி,

அன்று முதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து வாழ்ந்து வரல் வழக்காச்சு.