பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 டாடி பங்கு கொண்டு, அவைகளே வேரோடு சாய்க்க எழும் வெண்கல நாதங்கள் நாங்கள், -

மனிதாபிமானம், முற்போக்கு, உழைப்பின் பெருமிதம், விஞ்ஞானம் இவற்றைக் கவிதைக் கலையில் உயிர் வனப்போடு அள்ளிப் பொழியும் வித்தக விரல்கள் எங் களுடையவை. மொழி, இனம், சாதி சமய, நிறக் கொடுமை கள்-பிளவுகள்-பேதங்களைத் தரைப் புழுவாய் மிதித்து நசுக்கும் ஆவேசம் எங்கள் மூலதனம்,

நவநவமான உத்திகளில் புதுப்புதிதான உருவ வார்ப்பு களில், சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களே உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்.

முற்போக்கு, மனிதாபிமானம் ஆகிய நல்லிலக்கியப் பண்புகளைக் கூர்மைப் படுத்தவல்ல தத்துவங்களைக் கவித் துவங்களோடு இரண்டறக் கலந்து இலக்கிய அரங்கில் நாங்கள் புனிதப் போர் நடத்துகிருேம். எத்தனே காலத் திற்கு அச்சமும் பேடிமையும், அடிமைச் சிறுமதியும் சமூகத்தின் நீதிகளாகப் போதிக்கப் படுகின்றனவோ அத்தனை காலத்துக்கு எங்கள் கவிதைகளில் கோபத் தொனி இழையோடத் தான் செய்யும்.

ஆளுல் தலேதெறிக்க ஓங்காரக் கூச்சல் போடுவதே கவிதை, புரட்சிக் கவிதை என்று சொல்ல மாட்டோம். கோஷங்களின் ஊர்வலமே கவிதை என்பதை நாங்கள் மறுதலிக்கிருேம். அந்தப் போலி இலக்கியத்தனம் எங் களுக்குக் கிடையாது. நயமில்லாத சொற்சேர்க்கைகளும், நபும்சக விருப்பும் இலக்கியமாகி விடாது என்பதை நாங்கள் அறிவோம். அதனுல்தான் மாரீசப் படையல்களின் புற்றீசல்களுக்கு நடுவே நாங்கள் ஒளிப் பறவைகளாய் உலா வருகிருேம்.

மரபை நாங்கள் பழைய தலைமுறையின் பரிசோதனை களாய் மதிக்கிருேம். எனில், சேரன் செங்குட்டுவனின் பஞ்சகல்யாணிக் குதிரையில் இன்று நாம் சவாரி செய்ய முடியாது என்பதால், பாரியின் தேர் நமது முல்லைக் கொடிகளுக்குப் பந்தற்கால் ஆகமுடியாது என்பதால், கலன்