பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

வசன கவிதை பிறக்கிறது. இதில் 'கவிதைத் தொண்டனை விட நான் ஒரு படி அதிகமாகவே போக விரும்புகிறேன், வசன கவிதை, கவிதா உணர்ச்சிகளைக் கொட்டுவதில் கவிதைக்கும் மேல் போய் விடுகிறது என்பதே என் எண்ணம், -

கவிதை மூலமாகக் காட்ட முடியாத எந்த பாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?’ என்று 'எஸ்' கேட்கிருர். அவர் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். ஏன் காட்டக் கூடாது' என்று நான் கேட்கிறேன்."

இத்துடன் இந்த விவாதம் நின்று விட்டது.

ந. பிச்சமூர்த்தி சூருவளி யில் கதை, கட்டுரை, கவிதை எழுதவு மில்லை, வசன கவிதை பற்றிய விவாதத்தில் கருத்து தெரிவிக்கவுமில்லை. அவர் அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டுதாணிருந்தார். எப்போதாவது அவருடைய கவிதை "சக்தி போன்ற பத்திரிகையில் இடம் பெற்று வந்தது,

1940 களில் கலா மோகினி' தோன்றிய பின்னரே புதுக் கவிதை புது வேகத்தோடு வளர இடம் கிடைத்தது. 1942 ல் தான் பிச்சமூர்த்தி வசனகவிதை பற்றிய தமது எண்ணத்தை ஓரளவு வெளியிட்டார். - -

4. சில விளக்கங்கள்

திருச்சியில் 1942 ஜூனில் தோன்றிய கலாமோகினி' (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்த தோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிக்ஷ விவும், கு. ப. ரா. வும் அதில் தங்கள் படைப்புகளைவெளியிட்டார்கள். பிச்சமூர்த்தியின் காற்ருடி மழைக்கூத்து ஆகிய கவிதைகள் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றன. அதே வேளையில் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்றுக் கொண்டன,