பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 என்ற வசன கவிதையையும் ஏன் எழுதினர்? காட்சிகளையும் யாப்பிலக்கண முறையில் எழுதியிருக்கக் கூடாதோ?

மேற்சொன்ன ரசிகர்களுக்குப் பயந்து பாரதி காட்சிகளே யாப்பிலக்கண முறையில் எழுதியிருந்தால் கவைக்குதவாமல் போயிருக்கும், காட்சிகள் யாப்பிலக்கண முறையில் அமை யாததால்தான் அவ்வளவு சிறப்பும் அழகும் வேகமும் கொண்டிருக்கின்றன.

யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு. அதற்குக் கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்ற வஸ்து நேரிசை நிறையிசையில்லை. அவை ஒழுங்காக இருந்தால் மட்டும் கவிதை வந்துவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல கருத்தும் இருக்க வேண்டும். செவி துகள் கவிதை என்று கம்பன் சொன்னதைத் திரித்து செவி நுகர்வதுதான் கவிதை என்று கொள்வது தப்பு.கவிதை செவி நுகர்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருள். செவி நுகர்வதெல்லாம் எங்காவது கவிதையாக முடியுமா? கவிதை யெல்லாம் செவி நுகர்வதாக இருக்கும்.

வசன கவிதையைச் செவி நுகருமா என்ருல் நுகரும். ஏனென்ருல் வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய், தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும்வகை மட்டும் வேருக இருக்கும். அவ்வளவு தான், .

வசன கவிதைக்கும் யதுகை, மோனே கட்டாயம் உண்டு. ஏனென்ருல் இந்த அலங்காரங்களே எல்லாம் உண்டாக் கினது கவிதை. இலக்கணமல்ல. அது அவற்றை இஷ்டம் போல், சமயத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கின்படியே இருக்கவேண்டும் என்ருல் இருக் காது. இலக்கியம் கூறுவதுதான் இலக்கணம். இலக்கணம் கூறுவது இலக்கியமாகவே முடியாது. கவிதை எல்லாம் நன்னூல் யாப்பிலக்கணத்தை ஒட்டியே இருக்க வேண்டு "மென்று இலக்கணம் பிடிவாதம் செய்தால் நடக்காது. நன்னூலுக்கும் மேலான ஒரு புது நூலே இலக்கியத்தின்