பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கவிதை என்ற பெயரில் இல்லாவிடினும் அதன் உருவ மிருத்தல் கண்டின்புறத் தக்கது. தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் கட்டுரை யொன்றில் இது மிளிர்கின்றது,

சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகமும் கோங்கமும் வேங்கையும் குரவும் விரிந்து நாகமும் திலகமும் நறவமும் மாந்தியும் மரவமும் மல்லிகையும் மெளவலோடு -

மணங்கமழ்ந்து பாதிரியும் பராரை ஞாழலும் பைங் கொன்றையொடு பி னியவிழ்ந்து பொரிப்புன்கும் புன் ணுகமும் முருக்கொடு முகை சிறந்து வண்டறைந்து தேளுர்ந்து வரிக்குயில்கள் வரிபாடத் தண்டென்றல் இடை விராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் மாணிக்கச் செய்குன்றின் மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன்பூத்து, வண்டு துவைப்பத் தண்டேன்

துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.'

களவியலுரை யாசிரியர், இதனே வெறுமனே சொல் லடுக்குச் செய்திருக்கிருர் என்று கொள்வது ஆகாது. பொருள் பொலிவும் ஓசை நயமும் செறிந்த, தமது இனிய சொற் சாதுரியத்தினலேயே படிப்பவர் மனதைப் பரவசப் படுத்தி, இயற்கையாயமைந்த ஒரு சோலேயின் உருவத்தை அங்கு தீட்டி விடுகிருர் ஆசிரியர். விந்தையிதே!

கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வனப்பும் நிறைந்ததாகவே இத்தொடர் பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் வசன கவிதைக்குப் புறம்பானதன்று.

  • குருவியோப்பியும் கிளிகடிந்தும்

குன்றத்துச் சென்று வுைகி