பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைகளுமல்ல. அவை மனதைச் கிறங்க அடிக்கும் மது சிந்தனைகள். மனச்சிந்தனையின் உயிரோட்டத்தைக் கெடுக்கும் விஷச் சிந்தனைகள்.

நாம் அவற்றை மறந்து விடுவோம். நாம் எதிர் கொள்கின்ற புதுப்புது சிந்தனைகள் நம் நிகழ்காலத்தை நிகரில்லாமல் உருவாக்குகிறது. எதிர்காலத்தில் புதிர் கிளப்பாமல், அது தேனோட்டமான வாழ்வைத் தருகிறது. சிந்தனைகளின் விளைவுதான் செயலின் சிகரம். செயலின் சிகரம் தான் வாழ்வு என்பார்கள். நம் செயல்களில் சிங்காரம் அமைய, புதுச் சிந்தனைகள் நம்மைப் புடம் போட்ட பொன்னாக்கும். பண்பான வாழ்க்கைக்கு மெருகேற்றும். பிறர் போற்றுகின்ற மரியாதைக்குரிய, வணக்கத்திற்குரிய வாழ்க்கையையும் உருவாக்கும்.

ஆகவே இந்நூலைப் படிக்கும் பொழுது, இந்நூலிலுள்ள கருத்துக்கள், மேலும் பல புதுச் சிந்தனைகளை உருவாக்குமேயானால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன். இலக்கியம் என்பது, இதமான இனிய நினைவுகளை ஏற்படுத்தி, இலட்சிய வாழ்விற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்ற ஒரு அதிசய கற்பனை தேவதை என்றால், இந்த நூலும் அப்படியே உதவும் என்று நம்புகிறேன். என் நூல்களை ஆதரிக்கும், தமிழறிந்த மக்களுக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்.