பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குடுகுடுப்பைக்காரன் சட்டை

நம்முடைய தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பிற படங்களைப் பார்த்துக் காப்பியடிக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு முறை உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது புதுமைப்பித்தன், “ஒரு பட முதலாளி, தன்னுடைய படம் எடுத்து முடிக்கும் வரை மற்ற படங்களைப் பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்; இல்லையானால் அவர் எடுக்கும் படம் குடுகுடுப்பைக்காரன் சட்டை போலாகிவிடும்” என்றார்.

முன்னுரை எழுதவில்லை

ரகுநாதனின் புத்தகம் ஒன்றிற்கு புதுமைப் பித்தன் முன்னுரை எழுதுவதாக இருந்தது. ரகுநாதன் ஆசிரியராக இருந்து முல்லை முத்தையா நடத்திய ‘முல்லை’ மாத இதழில் ரகுநாதனின் நூல் வெளிவரவிருக்கும் விவரம் பற்றி அறிவிப்பும் வந்தது, ஆனால் புதுமைப்பித்தனால் அந்நூலுக்கு முன்னுரை எழுத இயலாது போயிற்று அதன் பின்னர் தாம் எழுதிய எல்லா நூல்களுக்கும் தாம் மட்டுமே முன்னுரை எழுதினார் ரகுநாதன்

திருப்பூர் கிருஷ்ணன்
தினமணி

22