பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எல்லாம் சேர்ந்த உருவம்

வீரபாண்டியன் பட்டணத்தில் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு செளகரியபட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையாப் பிள்ளை.

பிரச்சினைகளை மறப்பது எப்படி?

ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் செளகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.

எதுவரையில் பொறுக்கலாம்?

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

யாரைக் கொள்ளையடிக்கலாம்?

நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்ம சாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது.

நியாயமான உலகம்

பலவந்தத் திருட்டு கேஸாகியது, ஆறு மாசக் கடுங்காவல்.

பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டு தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலக மல்லவா?

29