பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்பிக்கையும் வலுவும்

முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமை தான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்து வரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல் இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன.

தர்மத்தின் வேலி

தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செல்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷவித்து முழுவதுமே நசித்து விடும் என்றாலும், அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை.

உண்மை எப்போது பிறக்கும்?

“உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்” [என்றார் கோதமர்]

எத்தகைய தரிசனம்?

வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனை கோயில் போல. திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கையலங்கிரியைப் பணிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள்.

30