இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனதால் இயலும்
காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றபடித் தாண்டி விட முடியுமா?
குழந்தையைக் கொல்லலாமா?
“குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்று விடுவதா?” (என்றாள் கைகேயி)
சத்துரு எது?
“மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு” [என்று கொதித்தாள் அகலிகை)
உண்மையை நிரூபிக்க முடியுமா?
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” (என்றாள் அகலிகை)
நிரூபித்தால் மட்டும் போதுமா?
“நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகி விடப் போகிறதா; உள்ளத்தைத் தொட வில்லையானால்?
31