பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பலவீனத்தின் மூலம் காசு

பலவீனத்தை வைத்துக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால்தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

எப்படி பிரிந்தார்கள்

நாங்களும் அவிழ்த்து உதறின நெல்லிக்காய் மூட்டை மாதிரிப் பிரிந்தோம்.

ராமாயணத்தில் கலையம்சம்

இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது. ராமாயணத்தில் ......... இல்லையா? தற்காலப் புஸ்தகத் தணிக்கை போர்டார், இப்பொழுது எழுதினால் ஆபாசம் என்ற தலைப்பில் தடை விதிக்கக்கூடிய வேறு விவகாரங்கள் இல்லையா? ஒரு பெரிய மாளிகை மாதிரி ராமாயணம் அகண்டாகாரமாக இருப்பதால், அவை பலர் கண்களுக்குத் தென்படுவதில்லை.

இலக்கிய மைல் கல் எது?

ஆனால் இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தியம், சோதிடம், சிற்றின்பம் பற்றியவை தவிர மற்றவெல்லாம், தம்மை ஒரு இலக்கிய மைல் கல் என மார்தட்டிக் கொண்டு வருகின்றன.

45