பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சட்டம்போட்டு மாட்டப்பட்ட படமா?

வாழ்வின் ரகசியம் இதுதான். மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடை செய்வதற்காகச் சட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல.

நிதிகள் திரட்டாதீர்
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்.
எந்தத் தொழில்?
யோக்கியமாய்
வாழ இங்கே
எந்தத் தொழில்
உண்டு?
ஊருணி கதை
ஊருணிக் கதை யெல்லாம்
ஊரறிந்த ரகசியம் காண்!
கண்ணடித்த பயன்!
கையடித்துக் கொடுத்தால்
காலேஜு வாசலிலே
கண்ணடித்த பயனடைவேன்!

54