இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சட்டம்போட்டு மாட்டப்பட்ட படமா?
வாழ்வின் ரகசியம் இதுதான். மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடை செய்வதற்காகச் சட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல.
நிதிகள் திரட்டாதீர்
- இத்தனைக்கும் மேலே
- இனி ஒன்று ஐயா, நான்
- செத்ததற்குப் பின்னால்
- நிதிகள் திரட்டாதீர்!
- நினைவை விளம்புகட்டி,
- கல்லில் வடித்து
- வையாதீர்.
எந்தத் தொழில்?
- யோக்கியமாய்
- வாழ இங்கே
- எந்தத் தொழில்
- உண்டு?
ஊருணி கதை
- ஊருணிக் கதை யெல்லாம்
- ஊரறிந்த ரகசியம் காண்!
கண்ணடித்த பயன்!
- கையடித்துக் கொடுத்தால்
- காலேஜு வாசலிலே
- கண்ணடித்த பயனடைவேன்!
54