இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எல்லை தெரியாதோ!
- தொல்லை வராமல்
- நாம் தொட்டுப் பழகிடுவோம்,
- எல்லை தெரியாதோ நமக்கெல்லாம்?
இன்னமுமா பாட்டு?
- பண் என்பார் பாவம் என்பார்
- பண்பு மரபென்றிடுவார்
- கண்ணைச் சொருகிக்
- கவி என்பார்-அண்ணாந்து
- கொட்டாவி விட்ட தெல்லாம்
- கூறு தமிழப் பாட்டாச்சே
- முட்டாளே இன்னமுமா பாட்டு?
பசியா வரம்
- பசியா வரம் அருள்வாய் அல்லால்
- நசியா நலம் அருள்வாய் முருகா
பால்காரனின் பால்
புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும், உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை நாமாக நினைத்துக் கொண்டால் நன்மைதான்.
சென்னையில் வசிப்பது
சென்னையில் வசிப்பதால், ராஜீயக் கைதி சிறையில் அனுபவிக்கும் சிரமத்தையெல்லாம் தியாகம் செய்யாமல் அனுபவித்துவிடலாம்.
55