பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 புதுமைப்பித்தன் கதைகள் திரும்பவில்லை; குறிஞ்சிப்பாடியினர் பிறகு அத்திசையில் செல்வதில்லை. சூரங்காட்டில் கொடிய மிருகங்கள் கிடையா. விஷக் கிருமிகள் கிடையா. அதுநிசப்தமும், இயற்கைத் தேவியும் கலக்குமிடமாம். சப்த கன்னிகைகள் திரிவார்களாம். மனிதர்கள் போனால் திரும்ப மாட்டார்கள். இது குறிஞ்சிப் பாடியினரின் எழுதாக் கிளவி. இந்த வேத வித்திற்குக் குறிஞ்சிப்பாடியில் தோன் றும் மகான்கள் அடிக்கடி பாஷியம் விரித்து அதை ஒரு பெரும் சமுதாயக் கட்டுப்பாடாக்கினர். அக்காலத்திலே, குறிஞ்சிப்பாடியின் சமூகத்திலே தோன்றி, அதன் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பாடுபட்ட வன் நன்னய பட்டன் என்ற வாலிபன். குறிஞ்சிப்பாடியில் குறுகிய ஆசைகளைப் பலப்படுத்தி வளர்ப்பதே அவனுக்கு ஒரு மகத்தான சேவையாகப் பட் டது. போரிலே மரணத்தை நேருக்கு நேராகப் பார்த்த வன். குறிஞ்சிப்பாடிச் சமூகத்தின் விஷப் பூச்சிகளைச் சித்திரவதைசெய்து, மரணக் கதவை மெதுவாகத் திறந்து, அதன் உளைச்சலிலே பயத்தைப் போக்கியவன். அவனுக்கு மரணம் பயத்தைத் தரவில்லை. விதியின் விசித்திர கதிக்கு அளவுகோல் உண்டா ? நன்னய பட்டனுக்கு மரணத்தின் பயத்தை அறிவிக்க மூல சக்திகள் நினைத்தன போலும். அவன் மனைவி பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து அந்த உளைப்பிலே உயிர் நீத்தாள். அன்று, நன்னய பட்டன், மரணத்திற்கு எத்தனையோ ரூபங்கள் உண்டு என்று அறிந்தான். . அதற்கப்புறம் மூன்று வருஷங்கள், வெங்காயச் சருகு போல் உதிர்ந்துவிட்டன. அந்த மூன்று வருஷங்களும், நன்னய பட்டனுக்கு, சமூகத்தின் குறுகிய கால அளவு கோலைக் கடந்து வேறு உலகத்தில் யாத்திரை செய்வதா யிருந்தன. அவன் சக்திகளின் பௌருஷத்தின் எல்லையை நாடினான்.