பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 புதுமைப்பித்தன் கதைகள் இருக்கும்பொழுது? அந்தச் சமயம் பார்த்துச் சாலைக்குக் கப்பிபோட ஆரம்பித்தார்கள். மருதிக்கும் அவள் பெற் றோருக்கும் சிறிது வேலை கிடைத்தது. இரண்டு மூன்று மாதம் கையில் காசு ஓட்டம். வீட்டிலே, புருஷன் அநியாய மாகச் சிறை சென்றான் என்பதைத் தவிர, வேறு ஒரு கவலையும் இல்லாமல் இருந்தது. எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டே யிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித் திருக்கிறது? மறுபடியும் கஷ்ட சக்கரம் அவர்கள் மீது சுழல ஆரம்பித்தது. அப்பொழுது தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக் கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ் வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! அதற்காகத் திரைகடலோடிச் சுதந்திரத்தைப் பணையம் வைத்தால் என்ன? கடைசியி லாவது ஏதாவது மொத்தமாகக் கொண்டு வரலாமே! மருதியும் அவளுடைய தாயாரும், கங்காணியுடன் கொழும்புக்குப் புறப்பட்டார்கள். III விஸ்வாமித்திரரும் வியாசரும் மலைக்குச் செல்வதற்குக் காரணம் ஒன்று; மிஸ்டர் ஸ்டோடார்ட், ஐ.ஸி.எஸ். மலைக்குச் செல்வதற்குக் காரணம் வேறு :- ஸ்ரீமதி மருதி யம்மாள் மலைக்குச் செல்வதென்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரிஷிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றி ஆராய்வது நாஸுக்கில்லை என்று கூறுவார்கள். மருதியம்மாளின் மலை வாசத்தைப் பற்றியும் அப்படித் தான். "வாட்டர் பால்ஸ்' என்பது தேயிலைத் தோட்டத் திற்காகவே தெய்வத்தினால் இலங்கையில் சிருஷ்டிக்கப் பட்ட இடம் என்பது கிரௌன் தேயிலைத் தோட்டத்தின் தற்போதைய முதலாளியான ஸர் ஜோஸப் பிட்ஜ்