பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

வாழ்க்கை! • . அம்பா சமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடை யிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜன நடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறிமுத்தையன் கோயில் விழாவன்று வேண்டுமானால், வட்டியும் முதலுமாக, ஜனங் கள் அந்த வழியில் நடந்து தீர்த்து விடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி, காதைப் பிய்க்கும் படியாகப் புழுதியை வாரி இறைத்துக்கொண்டு. கோலா கலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக் லொடக் என்று. அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டு விடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், கிரீச்' எனற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும் வண்டிக்காரர்களும், வண்டிமாடுகளும், சமதளத்தில் இறங்கி விட்டால், எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்துகொண்டு செல்ல இச் சாலையில் பூரண உரிமை யுண்டு. சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக்கேட்க வேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால் அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந் திருக்கும் மரங்களைப் பார்த்தால், போகும் வழி ஒரு நாளும் மலைப் பிரதேசத்தை அடையாது என்று எந்தக் கோவிலி லும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான் விக்கிரம சிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள். தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன. அன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச் சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு