பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

+ வாழ்க்கை! 129 நம்ம எட த்தை அவங்க புடிச்சுக்கிட்டாங்க இன்னிக்கி/ உனக்கென்னடா குளுவா. நீ சொரணை கெட்டவன்..." இருவரும் மழையின் உற்சாகத்தில் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். நாடோடிக்கு இது வினோதமாக இருந்தது.இருக்க இடமில்லை இந்த மழையில். இதில் என்ன உற்சாகம்! வாழ்க்கையே இந்த அசட்டுத்தனந்தான், அல்லது ஏமாற் றந்தான். மழை விட்டு மரங்களிலிருந்து மட்டும் ஜலம் சொட் டிக் கொண்டிருந்தது. மேற்புறத்திலிருந்து வெளி வந்த சந்திரன். புதிதாக ஸ்நானம் செய்து எழுந்த பிரகிருதி தேவியின் மீது காதற் பார்வை செலுத்தினான். "ஏய் குளுவா! அங்கென பாருடா!" என்று இரண்டு உருவத்தைச் சுட்டிக் காண்பித்து, குசுகுசுவென்று சொன் னாள் குளுவச்சி. அதுவுஞ் சரிதான்!" என்று குளுவன் அவளைத் தன் பக்கமாக இழுத்தான். குளுவச்சிக்கு என்ன பல மில்லையா? . للاي ஆனால், அந்த நாடோடி, ஒன்றிலும் லயிக்காது. ரந்தேங்கிய முகத்துடன், மலைப் பாதையில் நடந்து மறைந் தான். அவன் அவன் கண்கள் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில்லை. சாலையின் இருளும் அவன் உருவமும் ஒன்றாயின.