பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தெரு விளக்கு தெருக் கோடியிலே, அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத் தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது. இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட் டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப் பொழுது மூப்புப் பருவம். நிற்கும் கல்- உடம்பு சிறிது சாய்ந்து விட்டது. சிரத்தில் இருந்த கண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்து விட்டது. அந்தச் சிறுவன் விளையாட்டாகக் கல்லை எறிந்த பொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா? காற்று அடித்தால் உயிரை ஒரே யடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த் துடிக்கத் துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே! கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிற தென்று இந்தக் காற்றிற்கு நன்றி இருக்கிறதா? போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்? அது காற்றிற்குத் தெரியுமா? இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டா மாம்! அதை எடுத்துவிட வேண்டுமாம்! - அதற்கு ஒரு தோழன் - ஒரு கிழவன்.