பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

துன்பக் கேணி 15, பற்றிக் காரியம் மிஞ்சிய பிறகுதான் அறிய முடிந்தது. கிழவிக்கும் வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. ஆனால், பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால். இது மிகச் சாதாரணமான காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையிலேயே எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் ஸ்டோர் மானேஜர் லேசானவரா? விலக்க முடியாத பழக்கம். வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளையனை நினைத் துக் கண்ணீர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தால்...... நாட்களும் ஓடின. மருதியின் குழந்தையும் பிறந்தது பெண் குழந்தை. பெண் என்று தெரிந்ததும் மருதிக்குத் தாங்கமுடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதிதானே! கிழவி யிருப்பதினால் குழந்தைப் பாதுகாப்பிற்குச் சிறிது வசதியாக இருந்தது. அந்த மலேரியாப் பிரதேசத் தில் என்ன இருந்து என்ன பயன்? உயிர் வாழவேண்டும் என்ற வேட்கை ஜீவநாடியில் இருக்கவேண்டும். அந்தக் குழந்தைக்கு இருந்தது. அது தேயிலை பூக்க ஆரம்பித்துவிட்டது என்றால் மலேரியா தேவதைக்குப் பசி என்று அர்த்தம். நீர்வீழ்ச்சி யிலும் ஜலம் வற்றிவிடும். வேலையும் அதிகம். எண் ணிக்கை யில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல் கூலிகளும் மடிவார்கள். அங்கேயே பல காலம் தங்கிப் பழகிப்போன கூலிக்காரர்களைப் புலி அடித்துத் தின்றால் அதற்கும் மலேரியாக் காய்ச்சல் வந்துவிடும். அவ்வளவு சக்தி பொருந்திய மலேரியாவின் முன்பு கிழவியின் பொக்கான சரீரம் எதிர்த்து நிற்க முடியுமா? மருதியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அவள் போய் விட்டாள். கிழவியின் மரணம் மருதிக்குப் பின்பலத் தையே போக்கி, வாழ்க்கையின் தனிமையை அதி பயங்கர மாக்கியது. வேறு வழி யில்லாவிட்டால். என்ன பயங்கர மாக இருந்தால் தான் என்ன? தெய்வத்தின் கருணை அவ்வளவு மோசமாகப் போய் விடவில்லை. கண்ணைக் கெடுத்தாலும்,கோலையாவது பது